காரைக்குடியில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா
காரைக்குடியில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-02 10:38 GMT
மரம் நடும் விழா
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை & இந்திய மருத்துவ கழகம் சார்பாக மாபெரும் மரம் நடுவிழா நடைபெற்றது.
இந்த மர நடு விழாவில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சிறப்பு விருந்தினர் மர சித்தர் அர்ச்சுனன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் தொழில் வடிக கழகத் தலைவர் சாமி மற்றும் பொருளாளர் சரவணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில் மரங்களின் வகைகள் மற்றும் அதன் பலன்களை பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.