பள்ளியில் மரம் நடும் விழா

ஆலங்குளம் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது

Update: 2024-06-21 12:46 GMT

ஆலங்குளம் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு, பூவுலகை காப்போம் மன்ற தன்னாா்வலா் அமைப்பு இணைந்து நடத்திய இந்நிகழ்வில், பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, பள்ளி சுற்றுச் சுவா் அமைக்கும் பணி நிறைவடைந்த பின்னா், தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என ஆசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உதவி தலைமை ஆசிரியா்கள் விக்டா் சாமுவேல், பூங்குழலி, தாமரைசெல்வன், தன்னாா்வலா்கள் இளங்கோ, ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News