படையல் மதுவில் விஷம் - பிரேத பரிசோதனையில் தகவல்

நாகர்கோவில் அருகே கோவிலில் சாமிக்கு படைக்கப்பட்ட மதுவை அருந்தி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மதுவில் விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.;

Update: 2024-03-04 04:22 GMT
இறந்த செல்வகுமார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் நண்பர் அருள் என்பவருடன் அங்குள்ள ஒரு கோவிலில் படையலுக்கு வைத்திருந்த மதுவை இருவரும் சேர்ந்து குடித்தனர். பின்னர்  செல்வகுமாருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்தியில் வைக்கப்பட்டது.       

Advertisement

இது போன்று  அருளுக்கும் உடல்நிலை கூட பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.   இது தொடர்பான புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் விஷம் கலந்த மதுவை குடித்த தகவல் வெளியானது. இதனால் மதுவில் யாராவது விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என போலீசார்வை சந்தேகிக்கின்றனர்.  கோட்டார் போலீஸ்சார் முதற்கட்டமாக தொழிலாளி உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News