தீயணைப்பு பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்

Update: 2024-04-14 07:08 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு வார காலம் 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் .தீயணைப்பு துறை சார்பில், அதன் அடிப்படையில் இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சிறப்பு தீயணைப்புதுறை அலுவலர் தண்டபாணி தலைமையில். உதவி தீயணைப்புதுறை அலுவலர் மற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் வீரர்கள் இன்று நீத்தார் நினைவு நாள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News