10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

திருச்சி மாவட்டத்தில் 10வகுப்பு பொது தேர்வு துவங்கியது. இத்தேர்வை 33, 809 மாணவ மாணவிகளும், 9 சிறை கைதிகளும் எழுதுகின்றனர்.

Update: 2024-03-26 06:22 GMT

பொதுத்தேர்வு 

தமிழ்நாடு முழுவதும் இன்று 10வகுப்பு பொது தேர்வு துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் 16, 983 மாணவர்களும், 16, 826 மாணவிகளும் என மொத்தம் 33809 பேர் தேர்வை எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகள் 9 பேர் 10வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் முறைகேடு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக தேர்வு கண்காணிப்பதற்காக 2013அறை கண்காணிப்பாளர்களும், 551 சொல்வதை எழுதுபவர்கள், 230பறக்கும் படையினர், 339அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினர்கள்

Tags:    

Similar News