எலக்ட்ரிக் பைக் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

எலக்ட்ரிக் பைக் மீது லாரி மோதி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-04-26 15:27 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற மாரிமுத்து வயது 49. இவர், இவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், கரூரிலிருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் பசுபதி பாளையம் ரவுண்டான அருகே சென்றபோது,எதிர் திசையில்,கரூர் மாவட்டம், தளவாபாளையம், பஜார் பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 36 என்பவர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் லாரி, மாரிமுத்து ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாரிமுத்துவுக்கு இரண்டு கால்களிலும்,

Advertisement

வலது கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News