அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-18 10:54 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கொரடாச்சேரி அருகே பாண்டவையாறு பகுதியில் இருந்து லாரியில் அனுமதியின்றி மணல் திருடி செல்வதாக களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சிவசண்முகம் என்பவருக்கு தகவல் கிடைத்தது . இதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் சிவசண்முகம் புகார் அளித்துள்ளார்.

புகாரியின் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார் .இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றி வந்ததும் , இதில் தப்பி ஓடிய டிரைவர் கொரடாச்சேரியை சேர்ந்த சக்திவேல் என்பதும் தெரியவந்தது .

இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்திவேலை தேடி வருகின்றனர்.மேலும் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியினை மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News