மஞ்சள் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சள் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-12-11 14:34 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்டத்தில் விளை விக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது

.ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விலை விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் 1382 மஞ்சள் மூட்டைபள் விற்பனைக்கு வந்த நிலையில் 153 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் 8319 ரூபாய் முதல் 14089 ரூபாய் வரையிலும் , கிழங்கு 8008 ரூபாய் முதல் 12039 ரூபாய் வரையிலும் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News