மேம்பாலத்தில் கண்கவர் ஓவியங்கள் : மேயர் ஜெகன் ஆய்வு!
தூத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள கண்கவர் ஓவியங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 11:04 GMT
தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்றாவது மைல் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. முடிவுற்ற இப்பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.