ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்!

சேத்துப்பட்டு அருகே ஆம்புலன்சில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Update: 2024-04-06 06:40 GMT

இரட்டை பெண் குழந்தைகள்

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கிருஷ்ணவேணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . கிருஷ்ணவேணிக்கு அதிக வலி ஏற்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News