சேவல் சண்டை நடத்திய இருவர் கைது !

அரவக்குறிச்சியில் சேவல் சண்டை நடத்திய இருவர் கைது - காவல்துறை நடவடிக்கை.

Update: 2024-03-06 11:50 GMT

சேவல் சண்டை 

சேவல் சண்டை நடத்திய இருவர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சேவல் சண்டை நடத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, முருகன் நகர் பகுதியில், சேவல் சண்டை நடத்துவதாக அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 4ஆம் தேதி,மதியம் ஒரு மணி அளவில், முருகன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே, சேவல் சண்டை நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட, ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர், ஆட்டுக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும், ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சூலை முத்துசாமி வீதி பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் ஆகிய இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இருவரையும் கைது செய்து, சேவல் சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்களை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Tags:    

Similar News