எம்ஜிஆர் நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

எம்ஜிஆர் நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-16 09:13 GMT

கோப்பு படம் 

 கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எம்ஜிஆர் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருப்பதிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 14ஆம் தேதி இரவு 7 மணி அளவில் எம் ஜி ஆர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள எஸ் வி டி மஹால் அருகே பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா, அருகில் உள்ள ரெங்கம்பாளையம், கொங்கு நகர் பகுதியில் சேர்ந்த செல்லகண்ணு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகள், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் இருவரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags:    

Similar News