நெடுங்கனூரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

நெடுங்கனூரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-14 13:49 GMT

கோப்பு படம் 

கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, நெடுங்கனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஜனவரி 13ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நெடுங்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள அண்ணாமலை டிரேடர்ஸ் கடை அருகே உள்ள முள் புதரில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், தென்னிலை, அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கிடைக்காரன்பாளையத்தை சேர்ந்த நடராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 110ஐ பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News