போதைப் பொருட்கள் விற்ற இருவர் கைது!

விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியில் நடந்த சோதனையில் மளிகைக்கடையில் அத்துமீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-01 03:55 GMT

 விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியில் நடந்த சோதனையில் மளிகைக்கடையில் அத்துமீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி ராஜாளிப்பட்டி பகுதியில் மளிகைகடையில் வைத்து புகையிலை பொருட் களை விற்பனை செய்த துரைராஜ், சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News