கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

மானாமதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Update: 2024-02-19 11:50 GMT

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கடந்த 17.02.24-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படையினர் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கும் பொருட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த பெரியகண்ணனூரை சேர்ந்த சுந்தரபாண்டி மற்றும் தச்சனேந்தலை சேர்ந்த சுந்தர் ஆகியோர்களை விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஒடிசா மநிலத்தைச் சேர்ந்த ஜெயந்த் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதாக கூறியதையடுத்து, தனிப்படையினர் திருப்பூர் சென்று விசாரணை செய்ததில் ஜெயந்த் என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேற்படி 2 நபர்கள் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற கஞ்சா உபயோகிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Tags:    

Similar News