ஆத்தூர் அருகே டிராக்டர் நிலைதடுமாறியதில் இருவர் பலி

ஆத்தூர் அருகே டிராக்டர் நிலைதடுமாறியதில் இருவர் பலியாகினர்.

Update: 2024-02-02 14:32 GMT
கோப்பு படம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட கீரிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஜெயக்கொடி, நதியா உள்ளிட்ட 8 பேர் நேற்று (பிப். 1) காலை கூலி வேலைக்குச் சென்று மக்காச்சோளம் எடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு டிராக்டரில் வந்துள்ளனர்.

அப்போது சோழவந்தான் கோவில் அருகே டிராக்டர் நிலைதடுமாறியதில் ஜெயக்கொடி, நதியா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 6 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News