இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை தடுப்பு சுவற்றில் மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2024-01-16 01:46 GMT

பைல் படம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் உள்ள பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆம்பூர் புதுமனைப் பகுதியைச் சேர்ந்த அசிம்,மற்றும் ஷாமித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக் குறித்து சம்பவம் அறிந்து தாயும் தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரற்ற தன் பிள்ளையின் உடலைப் பார்த்து இதுக்காகவே விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வேண்டுமென்று கேட்டாய்... என்று தன்னை தானே அடித்து கொண்டு கதறியது அங்கு சுற்றி இருந்தவர்களும் கண்ணீர் வர வைத்து விட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்பு போக்குவரத்தை சரி செய்தனர்.
Tags:    

Similar News