அனுமதியின்றி பார் நடத்திய 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் பகுதியில் அனுமதியின்றி பார் நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-16 10:01 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் பகுதியில் அனுமதியின்றி பார் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஓசூர் டாஸ்மாக் கடை அருகில் அனுமதியின்றி பார் நடத்திய தனசேகரன் (வயது 43) மற்றும் கீழ்கொவளை கிராமத்தில் பார் நடத்திய ஜெகன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News