ஆள் கடத்தல் வழக்கில் கைதான இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு....

காங்கேயம் அருகே ஆள் கடத்தல் வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

Update: 2024-04-26 05:20 GMT

வழக்கு பதிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்காவை அடுத்த மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கலா மற்றும் அவரது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகியோரை கடந்த 2023ஆம்‌ ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கடத்தி அவர்களிடமிருந்து மிகப்பெரிய கொள்ளை கும்பல் ஒன்று ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை வழிப்பறி செய்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காங்கேயம் தனிப்படை போலிசார் தேடி வந்த நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர்களை போலிசார் கைது செய்து வழக்கு பதிந்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான மயிலாடுதுறை மாவட்டம், தெரியிலந்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அருண் என்கிற அருண்மொழி  தேவன் வயது 33 மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் என்கிற மாரியப்பன் வயது 34 ஆகிய இருவரின் மீது உள்ள வழக்கை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய  மாவட்ட நிர்வாகம் ஆணை பிரபித்துள்ளது.

Tags:    

Similar News