காஞ்சி அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் சிறையில் அடைப்பு

காஞ்சி அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-01-27 14:06 GMT

கைது செய்யப்பட்டவர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கிளாய் பகுதியைச் சேர்ந்தவர்விஷ்வா, 34. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் நடக்கும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த, தனிப்படை போலீசார் ரவுடிகளை கண்காணித்து தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்., 16ம் தேதி, சுங்குவார்சத்திரம் அடுத்த, சோகண்டி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி விஷ்வாவை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது,

போலீசாரை கத்தியால் வெட்டி தப்ப முயன்ற போது, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து விஷ்வாவின் கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அரக்கோணத்தில் பதுங்கிஇருந்த, பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய, விஷ்வாவின் கூட்டாளிகளான ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த சந்துரு, 22, பாலசந்தர், 21 ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்துருவின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் கணவர் மற்றம் மைத்துனருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் போலீசார் தான் பொறுப்பு என பேசிய வீடியோ, சமூக வலை தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது."

Tags:    

Similar News