தென்னிலையில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

தென்னிலையில் டாஸ்மார்க் கடை அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-11 15:52 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, கட்டாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 10ஆம் தேதி காலை 11 மணியளவில், கட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா ,சின்ன வாங்கபாளையம் அருகே உள்ள அவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபு, வேலாயுதம்பாளையம், அருகே

ஒண்டியூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர்,

அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags:    

Similar News