ஆயுதங்களுடன் பதுங்கிய 2 பேர் கைது

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவரை கைது செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-05 04:34 GMT

பைல் படம் 

மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் போலீசார் கண்டதும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் ஆண்டவர் கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், வல்லரசு என்பதும், அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் .மேலும் இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Tags:    

Similar News