பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

Update: 2023-11-05 11:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே கல்யாண மகாதேவி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மளிகை கடையில் வைத்து பட்டாசுகள் விற்பனை செய்த கல்யாண மகாதேவி வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் வெங்கடேஷ் மற்றும் கல்யாண மகாதேவி வடக்கு தெருவை சேர்ந்த சிவவடிவேல் என்பவரின் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News