மது விற்ற இரண்டு பேர் கைது

வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பதுக்கி விற்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-22 09:30 GMT

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

முத்தூர் காங்கேயம் சாலை மற்றும் மேட்டாங்காட்டு வலசு பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெள்ளகோயில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மேட்டங்காடு வலசு பகுதியில் உதவி ஆய்வாளர் அர்ச்சுனர் மற்றும் முத்தூர் காங்கேயம் சாலை பகுதியில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய இந்த சோதனையில் மேட்டங்காடு வலசு பகுதியில் குலவிபாளையம் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 53 என்பவரும், முத்தூர் காங்கேயம் சாலை பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியைச் சேர்ந்த முரளிதரன் 26 என்பவரும் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 14 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News