டூவீலர் விபத்து; மூவர் படுகாயம்

குமாரபாளையத்தில் நடந்த டூவீலர் விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-01-17 12:03 GMT

 குமாரபாளையத்தில் நடந்த டூவீலர் விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசித்து வருபவர் கேசவன், 28. சிவில் எஞ்சினியர். தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 08:45 மணியளவில், தனது பஜாஜ் பிளாட்டினா டூவீலரில், பின்னால் தன் மனைவி சௌமியாவை, 28,  உட்கார வைத்துகொண்டு, சேலம் சாலை, ராஜம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஸ்ப்லேண்டர் வாகன ஓட்டுனர், இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர்.

கேசவன், சௌமியா இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், சேலத்தை சேர்ந்த கார்மெண்ட்ஸ் கூலித்தொழிலாளி மவுனேஷ், 18, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News