இருசக்கர வாகனம் கார் மோதல்

கரூர் அருகே இருசக்கர வாகனம் கார் மோதலில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-10 00:55 GMT

விபத்தில் மூவர் படுகாயம்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, பஞ்சமாதேவி, அரசு காலனி, கரிக்காலி நகர், 4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாரியப்பன் வயது 22. இவரது மனைவி வினோதா வயது 20.இவர்களது 8 மாத குழந்தை ரோகன். இவர்கள் மூன்று பேரும் மே 5-ம் தேதி காலை 7 மணி அளவில், கரூர்-சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவரது வாகனம் மன்மங்கலம், அசோக் பேலஸ் ஹோட்டல் அருகே சென்றபோது, கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் என்பவர் வேகமாக ஓட்டிவந்த கார், மாரியப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்ததில் மாரியப்பன், வினோதா மற்றும் குழந்தை ரோகன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது. தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags:    

Similar News