லாரி மீது டூ வீலர் மோதி வாலிபர் பலி

ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது டூவீலர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-20 01:20 GMT

விபத்தில் வாலிபர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன் (33). இவர் மாங்குப்பம் கிராமத்திலிருந்து ஆற்காடு சென்று விட்டு, மீண்டும் மாங்குப்பம் நோக்கி சென்றுள்ளார். ஆற்காடு அடுத்த வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென வலது பக்கம் திரும்பி உள்ளது. இதனால் வில்வநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வில்வநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News