டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து !

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து- கணவன் மனைவி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-01 10:02 GMT

மருத்துவமனை

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, சோமுர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் வயது 74. இவரது மனைவி பூங்கொடி வயது 53. இவர்கள் இருவரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் கரூரிலிருந்து- சேலம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூ வீலரை கல்யாண சுந்தரம் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம், நானப்பரப்பு பிரிவு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த, அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று, கல்யாணசுந்தரம் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் பூங்கொடியையும், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்யாணசுந்தரத்தையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதை ஓட்டிய ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News