டூவீலர் - லாரி விபத்து
கரூரில் நடந்த டூவீலர் - லாரி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.;
Update: 2023-12-27 14:05 GMT
கரூரில் நடந்த டூவீலர் - லாரி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள மகளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி சுசீலா வயது 55. இவரது மகள் லோகம்மாள் வயது 30. இவர்கள் இருவரும், இவர்களுக்கு சொந்தமான டூவீலரில், திருச்சி- கரூர் சாலையில் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். இவரது வாகனம் வீரராக்கியம் பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி,விசூர் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் வயது 37 என்பவர்,வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த லாரி, லோகம்மாள் ஓட்டிச் சென்ற டூவீலர் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தாயும்,மகளும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுசிலா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.