இருசக்கர வாகன பேரணி

ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-23 13:47 GMT
ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு அளிப்பதற்கு பணம் வாங்கக் கூடாது, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 விழுக்காடு வாக்குப் பதிவு என்ற விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. சத்திரப்பட்டி அரசு பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, தானும் கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களை ஏந்தியவாறும், தலைக் கவசம் அணிந்தவாறும் காவல் துறையினர், வருவாய் துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் இப் பேரணியில் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் தொடங்கிய பேரணி சமுசிகாபுரம், வேலாயுதபுரம், ஆண்டாள்புரம், ஆர்ஆர் நகர், வஉசி நகர், பாரதி நகர், ரயில்வே மேம்பாலம், தென்காசி சாலை, எல்ஐசி அலுவலகம், தெற்கு காவல் நிலையம், பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை, நேரு சிலை பஞ்சு மார்க்கெட், வடக்கு காவல் நிலையம், மாடசாமி கோயில் தெரு, ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Tags:    

Similar News