பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது.ஆட்கள் நடமாட்டம் உள்ள பொழுதே திருடப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-03 03:19 GMT
சிசிடிவி பதிவு 
 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்... இவர் வீட்டுக்கு முன்பு கடந்த 31 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.மாலை 4.30 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்த வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.இந்த திருட்டு சம்பவம் குறித்து கவியரசன் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் சம்பவம் நடந்திருப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.பிறகு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News