டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இரு பெண்கள் படுகாயம்.
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இரு பெண்கள் படுகாயம். காவல்துறை நடவடிக்கை.
Update: 2024-02-26 05:12 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, சுங்ககேட் அருகே உள்ள கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர் மனைவி தமிழ்ச்செல்வி வயது 45.இதே போல கரூர், சணப்பிரட்டி, பாதையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன் மனைவி செல்வராணி வயது 54. இவர்கள் இருவரும் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 3:20 மணி அளவில், கருப்பகவுண்டன் புதூர் -முத்தாலம்பட்டி செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை தமிழ்ச்செல்வி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் தாந்தோணிமலை பகுதியில் உள்ள பழனிச்சாமி கார்மெண்ட்ஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் தாந்தோணிமலை, ஜீவா நகர் 1வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த சின்ன தம்பி மகன் சக்திவேல் வயது 34 என்பவர் ஓட்டி வந்த டூவீலர், தமிழ்ச்செல்வி ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த தமிழ்ச்செல்வி மற்றும் செல்வராணி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வராணியையும், தமிழ்ச்செல்வியை கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வராணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.