ஓடும் பஸ்ஸில் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது

கருங்கல் அருகே ஓடும் பஸ்ஸில் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-12-19 06:56 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதி குப்பைசட்டிவிளையை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி ஸ்டெல்லா மேரி. இவர் நேற்று கருங்கலிலிருந்து பாலூர் வழியாக செல்லும் அரசு பஸ்ஸில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.      அப்போது பஸ்சில் நின்ற இரண்டு இளம்பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி   ஸ்டெல்லாமேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.  உடனே  ஸ்டெல்லா மேரி கூச்சலிட்டார்.         உடனடியாக அந்த 2  பெண்களையும் ,   சக பயணிகள்  விரட்டி பிடித்து, கருங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்  அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிவரஞ்சனி (28), முத்து மாரி (27) என்பது தெரிய வந்தது. ரெண்டு பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News