மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் உமராபாத் போலீசார் அதிரடி நடவடிக்கை!
ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 09:21 GMT
மணல் கடத்திய மாட்டுவண்டி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் உமராபாத் போலீசார் அதிரடி நடவடிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடைபெறுவதாக உமராபாத் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் உமராபாத் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது போலீசார் மாட்டுவண்டையை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.