போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் அவதி!

புதுக்கோட்டை மச்சுவாடியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2024-07-01 11:41 GMT

புதுக்கோட்டை மச்சுவாடியில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மாவட்ட வன அலுவலகம், வனச்சரகர் அலுவலர் அலுவலகம், அரசு முன்மாதிரிப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன.இந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனத்துக்கு செல்லும் தார்ச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்ட நிலையில் இப்போது ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சிதிலமடைந்துள்ளது.இதனால் அலுவலர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளதால் சைக் கிளில் வரும் மாணவர்கள் அவ்வப் போது தடுமாறி கீழே விழுந்து காயம் டைந்து வருகின்றனர். இதுபற்றி துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. அலுவலர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டரின் விருப்ப நிதியின் கீழ் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News