அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பெரம்பலூர் மாவட்டம், சித்தளி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுகப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-03 02:47 GMT

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் சுற்றி திரிந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மே.2ம் தேதி சித்தளி வெரட்டா குளம் விநாயகர் கோவில் அருகில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல் என் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீசார் முதியோரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைகள் வைத்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், மேலும் வெள்ளை வேஸ்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்த நபரை பற்றி தகவல் தெரிந்தால், மருவத்தூர் காவல் நிலையம் 9498100695 மற்றும் மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் 9442040962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை மூலம் தகவல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News