வேரோடு சாய்ந்த அரசமரம் போக்குவரத்து பாதிப்பு !

அகரம்சீகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அகரம்சீகூர் - செந்துறை சாலையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

Update: 2024-06-21 05:00 GMT

போக்குவரத்து பாதிப்பு

அகரம்சீகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அகரம்சீகூர் - செந்துறை சாலையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது. இந்த சாலை வழியாக ஜெயங்கொண்டம் கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் வசதி உள்ளது. அதிகாலை நேரத்தில் மரம் சாய்ந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வந்த வதிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் உள்ளூர் மக்கள் உதவியுடன் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடர்பாடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்தார். இதனால் சுமார் 3 மணி நேரம் செந்துறை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News