பூங்காவனத்தம்மன் கோவிலில் வைகாசி மாதத் திருவிழா!

பூங்காவனத்தம்மன் கோவிலில் வைகாசி மாதத் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது .

Update: 2024-05-20 15:10 GMT

பூங்காவனத்தம்மன் கோவிலில் வைகாசி மாதத் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது .


ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே சிறுவளையம் கிராமத்தில் அமைந்துள்ள பூங்காவனத்தம்மன் கோவிலில் வைகாசி மாதத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், மோர், இளநீர், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி கொண்டனர். பின்னர் அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் வைத்தனர். பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க மலர்களால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இதில் கர்ணாவூர், மகேந்திரவாடி, பெறுவளையம், பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News