வேன் டிரைவர் கொலை : பெண் உள்பட 5பேரிடம் விசாரணை

வேன் டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2024-02-09 15:46 GMT

பெயர் பலகை 

மதுரை மேலூர் கோட்டநத்தாம்பட்டி பாண்டி 40, பால் வேன் டிரைவராக பணிபுரிந்தார்.பிப். 5 காணாமல் போகவே கீழவளவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது தம்பி மனைவி பூபதி மற்றும் இரண்டாவது கணவர் கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் பாண்டியை கடத்தி கொலை செய்து நரசிங்கம்பட்டியில் உள்ள சோழியன் கண்மாயினுள் போட்டதை ஒப்புக்கொண்டனர் .

விசாரணையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்த தம்பி வாஞ்சிநாதன் சொத்துக்களை தனக்கு எழுதி தருமாறு பூபதியிடம் பாண்டி பிரச்சனை செய்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது .போலீசார் ரூபதி அவரது இரண்டாவது கணவர் கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News