பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தாராபுரம் மூலனூரில் பட்டா மாறுதலுக்காக ரூ. 5000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-24 05:35 GMT

தாராபுரம் மூலனூரில் பட்டா மாறுதலுக்காக ரூ. 5000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார்.

மூலனூரில் பட்டா மாறுதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது.  திருப்பூர்மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் சேகரன் (45) இவர் பட்டா மாறுதலுக்காக கடந்த9-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் (40) இது தொடர்பாக விசாரணை நடத்த சேகரனை அழைத்துள்ளார்.

அப்போது பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வேண்டு மென சண்முகம் கேட்டதாக தெரிகிறது.இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேகரன், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தார்.இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் இன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சேகரனிடம் கொடுத்து சண்முகத்திடம் கொடுக்க வைத்தனர்இதனை அவர் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த போலீசார் சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News