அமைச்சர் உதயநிதிக்கு நினைவு பரிசு வழங்கிய வீரபாண்டி பிரபு

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை ஏற்பாடு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ.பிரபு மற்றும் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

Update: 2024-02-02 07:05 GMT

நினைவு பரிசு 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு கோலாகலமாக சமீபத்தில் நடந்தது. இதையொட்டி மாநாட்டை ஏற்பாடு செய்த, கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு மற்றும் நிர்வாகிகள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News