டீக்கடைக்குள் மோதிய வாகனத்தால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோட்டில் தாறுமாறாக ஓடிய வாகனம் டீ கடைக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-28 06:31 GMT

வாகனம் மோதி விபத்து 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரோட்டில் தாறுமாறாகச் சென்று டீக்கடைக்குள் மோதிய வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் வனத்துறை என்று ஸ்டிக்கர் பதித்து மது போதையில் தாருமாறாக வாகனம் ஓட்டி சென்ற நபர்,கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடைக்குள் வாகனம் சென்றது. சாலையின் ஓரத்தில் நின்று இருந்த இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ரோட்டில் கூடியிருந்த பொதுமக்கள், கூச்சலிட்டு வாகனத்தை சுற்றி வளைத்துப் பிடித்தனர். குடி போதையில் ஓட்டிய நபரை பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News