வெள்ளகோவில் : சாலையில் சென்ற ஆம்னி தீப்பிடித்து எரிந்து சேதம்

வெள்ளகோவில் முத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் துரிதமாக வந்து தீயை அணைத்தனர்.

Update: 2024-03-31 07:45 GMT

தீயை அணைக்கும் வீரர்கள் 

வெள்ளகோவில் முத்தூர் சாலை பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் மளிகை கடை நடத்தி வருவதுடன் மொத்த விலையில் பிஸ்கெட், பன், இனிப்பு, கார வகைகளை வாங்கி பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக கியாசில் இயங்கும் வேனை பயன்படுத்தி வந்தார். அந்த வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வெள்ளகோவில் -முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேனின் என்ஜின் பகுதியில் புகைய ஆரம்பித்து திடீரென தீப்பிடித்தது. உடனடியாக வேனிலிருந்து இறங்கிய அவர் வெள்ளகோவில் தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வேன் மற்றும் அதிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

Tags:    

Similar News