வாலிபரை துன்புறுத்தி வீடியோ; சிறுவன் உள்பட மேலும் இருவர் கைது

பெரம்பலூர் அருகே நாவலூரில் வாலிபரை துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, சிறுவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-03 13:31 GMT

பெரம்பலூர் அருகே நாவலூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவரது மகன் வெங்கடேசன் வயது 28, இவர் கேட்டரிங் டெக்னாலஜி படித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்காத நிலையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில் வெங்கடே சனை அப்பகுதியை சேர்ந்த ஜோதிவேலுவின் மகன் முருகவேல் (27), மணிராஜ் மகன் ரஞ்சித் (21) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த 17 வயது சிறு வன் உள்ளிட்டோர் அவ்வப் போது ஒன்று சேர்ந்து வெங்கடேசனை கைகளாலும், குச்சியாலும் தாக்கி துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை கருணாகரன் மகன் அருண் (20) செல்போனில் வீடியோ எடுத்து, அதனை வாட்ஸ்-அப் பில் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் அடித்து துன்புறுத் தியதில் வலிதாங்க முடியா மல் வெங்கடேசன் அலறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து தர்மராஜ், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகவேல் உள்பட 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முருகவேலை கைது செய்தார். அதனைத் தொடர்ந்து செல் போனில் வீடியோ எடுத்த அருணையும், சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ரஞ்சித் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீ சார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறுகையில், துன்புறுத்தப்பட்ட வெங்கடேசனை மாவட்ட நிர்வாகம் மூலம் மருத்துவம் னையில் சேர்த்து உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ரஞ்சித் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News