எஸ்.கே.பி கல்வி குழும பள்ளியில் முதல் எழுத்து விழா

விஜயதசமியை முன்னிட்டு எஸ்.கே.பி கல்வி குழும பள்ளியில் முதல் எழுத்து விழா மாணவர் சேர்க்கை நடந்தது .

Update: 2023-10-25 04:59 GMT

முதல் எழுத்து விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை எஸ். கே.பி வனிதா பன்னாட்டுப் பள்ளி மற்றும் எஸ்.கே.பி வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து முதலெழுத்து விழா மிக சிறப்பாக விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்கேபி கல்வி குழுமங்களின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் கே வி அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர் சக்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் திருமதி பிரியா கருணாநிதி வரவேற்புரையாற்றினார் பிஆர்ஓ சையத் ஜஹிருத்தின் கலந்து கொண்டார். விழாவின் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.அடுத்ததாக சிறப்பு விருந்தினர் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் நூலகர் தயாள வெங்கடேசன் மற்றும் எஸ்.கே.பி.வனிதா பன்னாட்டுப் பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி மற்றும் பெற்றோர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். எஸ்.கே.பி.வனிதா பன்னாட்டுப் பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனமாடியும், எஸ்.கே.பி. வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் நவராத்திரியை நினைவுபடுத்தும் விதமாக சிவன் தேவி பார்வதி - ஆகியோரைப் போற்றும் விதமாக நடனமாடியும் மகிழ்வித்தார்கள். சிறப்பு விருந்தினர் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் நூலகர் தயாள வெங்கடேசன் படிப்பின் அவசியத்தையும் திருக்குறக்குறளைப் படித்தால் வாழ்வில் எப்படி வெற்றி அடைவது என்பது பற்றியும், பெற்றோர்களுக்கு நாம் எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் மாணவர்களின் கரம் பிடித்து நெல்மணிகளில் "அ" என்னும் எழுத்தை எழுத வைத்தார்கள். மேலும் விஜயதசமியை முன்னிட்டு மாணவ மாணவியர்களின் சேர்க்கையும் நடைபெற்றது

Tags:    

Similar News