விஜயகாந்த் நலம் பெற நூதன முறையில் பிரார்த்தனை செய்த ஓவியர்

Update: 2023-12-01 10:43 GMT

ஓவிய ஆசிரியர் செல்வம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் ,விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை ஓவியமாக பிரஷ்க்கு பதிலாக "விநாயகர் சிலையாலேயே" விஜயகாந்த் படத்தை வரைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னணியில் இருக்கும்போது, புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்பட்டார், தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் மருத்துவமனை அறிக்கையில் சற்று பின்னடைவு 14 நாட்கள் மருத்துமனையில் இருக்க வேண்டும், இதனைக் கேட்ட ரசிகர்கள், கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்தோடு, பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம்,  விஜயகாந்த்  ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என்று போற்றக்கூடியவர், இனியவர், அவர் உடல் நலம் பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டி இறைவனை பிரார்த்திப்போம், பிரார்த்தனை ஓவியமாக "விநாயகர் சிலையாலேயே" நீர்வண்ணத்தில் விநாயகர் சிலையை தொட்டு கேப்டன் அவர்கள் நல்லா இருக்கணும் என்று வேண்டி விஜயகாந்த் உருவத்தை ஏழு நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

Tags:    

Similar News