வாக்கு எண்ணும் மையத்தில் கண் கலங்கிய விஜயபிரபாகரன்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட விஜய பிரபாகரன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து அழுதபடியே சோகத்துடன் கிளம்பி சென்றார்.

Update: 2024-06-05 09:40 GMT

விஜயபிரபாகரன் (பைல் படம்) 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சியின் விஜய பிரபாகர் போட்டியிட்டார். இவரும்  இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் முதல் சுற்று முதல் 24 சுற்று வரை தொடர்ந்து ஏற இறங்க வாக்குகள் வாங்கிக் கொண்டிருந்தார் இறுதிச்சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூர் வாங்கிய வாக்குகள் மொத்தம் 3,85,256 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் வாங்கிய வாக்குகள் 3,80877, பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வாங்கிய வாக்குகள் 1,66,271 நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுசிக் வாங்கிய வாக்குகள் 77031.

இதில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் தோல்வி அடைந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் அழுத முகத்துடன் சோகத்துடன் சென்றார்

Tags:    

Similar News