காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

அம்பேத்கர் சிலை அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

Update: 2023-11-03 13:55 GMT

காத்திருப்பு போராட்டம் ஈடுபட்ட கிராம மக்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், குடஞ்சாடி கிராமத்தில் கண்மாயில் மீன் பிடிப்பது தொடர்பாகவும், குடஞ்சாடி பஞ்சாயத்து அலுவலகம் உருளியில் செயல்பட்டு வரும் நிலையில் குடஞ்சாடியில் அலுவலகம் இயங்க வலியுறுத்தியும் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிவகங்கை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிற 06.11.23 திங்கட்கிழமை முதல் பஞ்சாயத்து அலுவலகம் குடஞ்சாடியிலேயே இயங்கும், கண்மாயில் மீன் பிடிப்பது தொடர்பாக 15 தினங்களுக்குள் உயர் அதிகாரிகள் மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்

Tags:    

Similar News