காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-12-09 06:51 GMT

காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் ஓ. துலுக்கப்பட்டி மாணிக்கநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 10 நாள்களுக்கு மேலாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை என புகார் எழுந்தது.இதையடுத்து நேற்று கிராம மக்கள் காலிக் குடங்களுடன் முக்கூடலில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News