கிணற்றினால் பரிதவிக்கும் கிராம மக்கள்

கிணற்றினால் பரிதவிக்கும் கிராம மக்கள்

Update: 2023-12-23 10:54 GMT

கிணற்றினால் பரிதவிக்கும் கிராம மக்கள்

வடமதுரை : அய்யலுார் அருகே ரோடு பிரிவில் விபத்து ஆபத்தாக இருக்கும் திறந்த வெளி கிணற்றால் அவ்வழியே செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. அய்யலுார் எரியோடு ரோட்டில் வேங்கனுார் அருகில் வடுகபட்டிக்கு ரோடு பிரிகிறது. இதன் வழியே பாண்டியனுார், தோப்புப்பட்டி, பூவன்களம், பாலக்குறிச்சி, வடுகபட்டி என பல கிராமங்களுக்கு பலரும் பயணிக்கின்றனர். இப்பகுதியில் ரோடு பிரிவு இடத்திலேயே ரோட்டையொட்டி திறந்தவெளி கிணறு உள்ளது. இங்கு விபத்து ஆபத்தை தடுக்கும் நோக்கில் தடுப்புச்சுவர் கட்டி உள்ளனர். ஆனால் என்ன காரணத்தாலோ ரோடு மட்டத்துடன் தடுப்புச்சுவர் நிற்பதால் விபத்து அபாயத்திற்கு முடிவு ஏற்படாமல் உள்ளது என்றனர்.
Tags:    

Similar News